Wednesday, August 22, 2012

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரப்
பாடல் -01



ஜெயஜெய துர்கதி நாஷினி காமினி
ஸர்வ ஃபலப்ரத ஷாஸ்த்ரமயே
ரதகஜ துரகபதாதி ஸமாவ்ருத
பரிஜன மண்டித லோகனுதே
ஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
கஜலக்ஷ்மி ரூபேண பாலயமாம்
.
துர்கதி மாற்றி அருள்பவளே
            திரு மாலவன் காதலில் கனிந்தவளே
கேட்டவை எல்லாம் கொடுப்பவளே
            நல்ல சாத்திரங்களின் வடிவானவளே
ரதகஜ துரக பதாதிகள் சூழ்ந்திட
            திகழ்ந்திடும் பாற்கடல் நாயகியே
அண்ட சராசர உயிர்கள் அனைத்துமே
            அன்புடன் பணிந்திடும் தேவதையே
அரியுடன் பிரம்மனும் அரனுடன் தேவரும்
            அடி பணிந்தேற்றிடும் அன்னையளே
தாபங்கள் அனைத்தையும் நீக்கியே காத்திடும்
            தாமரைப் பாதங்கள் கொண்டவளே
மதுசூதனனின் காதலியே
என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே
 அன்புடன் உன்னடி பணிகின்றோம்
            எமை கஜ லக்ஷ்மியே காத்தருள்வாய்! 


ஓம் சாந்தி ஓம்

No comments:

Post a Comment